வெள்ளி, 19 ஜூலை, 2013

KUMUDAM M.D P.VARADARAJAN PAID HOMAGE TO LYRICIST VAALI..

வாலிக்கு அஞ்சலி செலுத்தும் குமுதம் அதிபர் வரதராசன் மற்றும் குழும ஆசிரியர் கோசல்ராம்..

மறைந்த கவிஞர் வாலியின் உடலுக்கு குமுதம் அதிபர் பா.வரதராசன் மற்றும் குழும ஆசிரியர் கோசல்ராம் அவர்கள் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்கள். வாலியின் மகனான பாலாஜியை சந்தித்து குமுதம் அதிபர் ஆறுதல் சொன்னபோது, ‘அப்பாவுக்கு நான் மட்டும் தான் மகன் என்று நினைத்தேன் ஆனால் இன்றைக்கு தான் அவருக்கு இத்தனை மகன்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.கடைசியாக ஸ்ரீமத் அழகிய சிங்கர் நூலை எழுதும் வாய்ப்பை குமுதம் அப்பாவுக்கு அளித்திருந்தது.அந்த நூலை எழுதியதை பற்றி அப்பா அடிக்கடி பெருமையுடன் பேசுவார்” என்று தழுதழுத்தார் பாலாஜி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக