புதன், 9 அக்டோபர், 2013

நெகிழ்ந்த முதல்வர்...

உத்தரகாண்ட் மாநிலம் பெருவெள்ளத்தில் சிக்கி உருக்குலைந்த போது ‘அம்மாநில சீரமைப்பிற்கும் நம் இந்திய சகோதரர்களான அம்மாநில மக்களின் மறுவாழ்விற்கும் நிதியளியுங்கள்’ என்று குமுதம் சொன்னது தான் தாமதாம். வாசகர்களாகிய நீங்கள் கொஞ்சமும் தயங்காமல் ரூ.31,85,269 ரூபாயை அன்புடன் அனுப்பி வைத்தீர்கள். இன்னமும் அனுப்பி கொண்டிருக்கிறீர்கள்.

கடந்த வாரம் குமுதம் குழும ஆசிரியர் கோசல்ராம், வாசகர்களின் அன்பு நிதியோடு உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுனாவை சந்தித்தார். ‘தென் கோடியிலிருந்து இப்படி ஒரு உதவியா, குமுதம் வாசகர்களுக்கு நன்றி சொல்ல நானும் உத்தரகாண்ட் மக்களும் ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று நெகிழ்ந்தார் விஜய் பகுகுனா.

உத்தர்காண்ட் முதல்வருடன் குமுதம் குழும ஆசிரியர் ச.கோசல்ராம்.





வாரி வழங்கிய வாசகர்களால் தமிழனின் கொடைப்பண்பு உத்தரகாண்ட் வரை எதிரொலித்திருக்கிறது.
நிதியளித்த அத்தனைப்பேருக்கும் குமுதம் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

வாசகர்களுக்கு குமுதம் குழும அதிபர் பா.வரதராசனின் செய்தி:




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக